Sunday, January 28, 2007

என் அருகில் நீ இருந்தால்..

உயிர் கொடுத்து எனை செய்தாய் தாயே
நான் வளர உரமானாய் நீயே
என்னை பார்க்க கண் மலர்ந்தாய் நீயே – மீண்டும்
உன் வயிற்றில் பிறக்க தவம் செய்வேன் நானே

உயிரொடு உடல் வளர உரம் மட்டும் போதும் – நல்
அறத்தோடு நான் வளர உன்னை போல தாய் வேண்டும்
உன் கனவும் உன் ஆசையும் பாலாய் என்னில் தந்தாய்
நான் வளர என் கண்ணில் நீ கனவு கண்டாய்

அடிகொரு முறை என் உச்சி முகர்ந்தாய்
அரை மணி கூட பிரியாது என் அருகில் நீ இருந்தாய்
ஒற்றை உயிராய் நீ மட்டும் தானே இருந்தாய் – பின்
ஏனம்மா என்னை நீ விற்றாய்?

Thursday, January 25, 2007

கரிசகாட்டு பூவே..

ஏ புள்ள..எங்கடி இருக்க?
உடமாட்டு வண்டியில
ஒரு மாட்ட பூட்டிகிட்டு
உன்னை பார்க்க வந்தேனே

ஒத்தையடி பாதையில
ஒரு முழம் பூவோட
உனக்காக நின்னேனே
சுட்டெரிக்கும் வெயிலிலே

சுள்ளி பொருக்க போகயிலே
கூடு விட்டு போகுதடி என் உசிரு
உன்னை
கூத்து கட்ட துடிக்குதடி என் மனசு

சொந்தமுன்னு வந்துபுட்ட
சொத்துசொகம் வேணாம்புள்ள
சீல துணி வாங்கியாரேன்
சிங்காரிக்க வேணாம்புள்ள

சீவி முடிஞ்ச தலையில
ஒத்த பூவ வச்சுகிட்டு
மஞ்சள் முடிஞ்ச மஞ்ச கயிர
கட்டிகிட்டா போதுமடி

இரை தேடி போனவுக
கூடு தேடி வாரக
புல் மேய போனவுக
ஊடு தேடி போராக

சுள்ளி பொருக்க போன புள்ள
உன்னை மட்டும் காணோமடி
கூட வந்த பொம்பளைக
கூட்டு சேர்ந்து போரக

ஒத்தையிலே நின்ன என்னை
ஓர பார்வை பார்த்துபுட்டு
கூட்டுகாரி ஒருத்திகிட்ட
பொரணி பேசி சிரிக்குராக

போனவுக மொத்ததில
ஒன்ன மட்டும் காநோமடி
தட்டி விட்ட மாட்டபோல
என் மனசு ஓடுதடி

தறி கெட்ட ஒட்டத்தில
என் மனசு கரையுதடி
எட்டு மொளம் சீல கட்டு
கை இறுக்க ரவிக்கை போட்டு
கெண்ட காலு தெரிய
ஒத்தையில வாரவலே

அயிர மீனு கண்ணுகுள்ள
அரை டஜன் ஆசை
கருவேலன் காட்டுகுள்ள
உன் காலடி ஓசை
கூடு சேர்ந்த பறவையெல்லாம்
கூடி நின்னு பார்க்குதடி
ஒய்யாரி இவ நடந்து வர
நிலவும் எட்டி பார்க்குதடி
பொட்டபுள்ள உன்கிட்ட
அப்படிஎன்ன சேதி இருக்குகுதடி?

வெக்கம் ஒரு கண்ணுகுள்ளே
ஆசை ஒரு கண்ணுகுள்ளே
ஒரு சேர என்னை பார்த்துபுட்ட
கூட வந்த பொம்பளைய
முன்னாடி அனுப்பிவிட்டு
வேணுமுன்னே என்னை காக்க வச்ச

வாடிபட்டி,அரசம்பட்டி முறை
முனாச்சிபட்டி,மூலகரைபட்டி வரை
வேரகுலம் சாத்தன்குலம் முதல்
நாக குலம்,தெக்கன்குலம்னு
பொண்ணுக என்னை தேடி வர
சிந்தாமணி நீ மட்டும்- எனக்கு
சீதனமா வாயெண்டி

பார்த்த கண்ணு மாறாம
பூத உடல் நோகாம
சுள்ளி கட்டு தலையோட
என் சமீபம் வந்தேயே

பார்த்த பொண்ணா இருந்தாலும்
பார்வை புதுசா இருக்குதடி
உன்னையும் என்னையும் தவிர மத்ததெல்லாம்
மாயமா மறந்து போனதடி..

Tuesday, January 23, 2007

நானும் ஜோதில ஐக்கியமாகிட்டேன்..

பார்த்து பழகிய களம்..
படித்து புரிகிற வளம்..
என் குரு பார்வை தளம்
வருக...வருக என உங்களை வரவேற்கிறது.