Sunday, January 28, 2007

என் அருகில் நீ இருந்தால்..

உயிர் கொடுத்து எனை செய்தாய் தாயே
நான் வளர உரமானாய் நீயே
என்னை பார்க்க கண் மலர்ந்தாய் நீயே – மீண்டும்
உன் வயிற்றில் பிறக்க தவம் செய்வேன் நானே

உயிரொடு உடல் வளர உரம் மட்டும் போதும் – நல்
அறத்தோடு நான் வளர உன்னை போல தாய் வேண்டும்
உன் கனவும் உன் ஆசையும் பாலாய் என்னில் தந்தாய்
நான் வளர என் கண்ணில் நீ கனவு கண்டாய்

அடிகொரு முறை என் உச்சி முகர்ந்தாய்
அரை மணி கூட பிரியாது என் அருகில் நீ இருந்தாய்
ஒற்றை உயிராய் நீ மட்டும் தானே இருந்தாய் – பின்
ஏனம்மா என்னை நீ விற்றாய்?

2 comments:

Anonymous said...

nalla thaan iruku..aana over senti-ya irukay Guru!!!

gurusri said...

anonymous,
adutha kavidhai-ya paarunga...asathiduvoom..