Saturday, February 24, 2007

கலிங்கம் - தொடர்கதை(பாகம்-1)

நான் குரு. எங்க‌ப்பா அடிக்கடி சொல்வார் கனவு காணாதே-னு.. எங்க சார் அடிக்கடி சொல்வார் பேப்பர்ல கதை எழுதாதேனு.. ஆனா எனக்கு கனவு காணவும் கதை எழுதவும் நிரம்ப பிடிக்கும்.(என்னடா Mani Ratnam assitant range-க்கு பேசுறான் நினைக்கிறீங்களா.. அதான் குரு!)
சரி கதைக்கு வர்றேன்..
ந‌ம்ம‌ க‌தையின் நாய‌க‌ன் ஒரு ப‌டையின் த‌ள‌ப‌தி.
இட‌ம்: இந்திய சீன எல்லை(இமைய‌ம‌லையின் அடிவார‌ம்)
பெய‌ர்: சால்யன்
த‌குதி: ம‌ற்ப்போர்,விற்ப்போர்,குதிரை யேற்ற‌ம்,...
ப‌த‌வி: த‌லைமை த‌ள‌ப‌தி
கால‌ம்: கி.பி 12ம் நுற்றாண்டு

முன் கதைச் சுருக்கம்:-
கலிங்க நாட்டிற்கும்,நேபாள நாட்டிற்கும் நீண்ட நாள் பகை.இருவரும் சமபலம் கொண்டவர்கள்.அதனால் இருவரும் சரியான சந்தர்ப்பத்தை எதிர் நேக்கி காத்திருந்தார்கள்.இரு நாட்டுப் படை எந்த நேரத்திலும் தயார் நிலையிலேயே இருக்கும்.இதனால் இரு நாட்டின் வாணிபம்,வளர்ச்சி போன்றவை பாதிப்புக்குள்ளானது.இந்த சூழ்நிலையில் கலிங்க நாட்டின் அரசவை கூடியது.இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் ஒன்று,நேபாள நாட்டிற்கு நட்பின் முறை தூது அனுப்புவதென்று முடிவுசெய்யப்பட்டு அதை மந்திரி சாரங்கன் நிறைவேற்றினார்.

நேபாள மன்னன் யுவான் சென் தூதை ஏற்று தன் மகன் மியான் சென்-ஐ நட்பின் நிமித்தமாக கலிங்க நாட்டிற்கு அனுப்பிவைத்தார்.மியான் சென் கலிங்க நாட்டில் பல விருந்து,கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டான்.இந்த சூழ் நிலையில் மியான் சென்னிற்கும்,இளவரசி நந்தினி தேவிக்கும் காதல் மலர்ந்தது.வளர்ந்தது. நாட்கள் கடந்தது.மியான் சென் தன் நாட்டிற்கு புறப்படும் பொழுது இளவரசியிடம் ஒரு ஓலையை கொடுத்துவிட்டு சென்றான்.

சில நாட்கள் கழித்து,இளவரசி மியான் சென்-ஐ காண கிளம்பினாள்.அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தளபதி சால்யன் இளவரசியின் செயலைக் கண்டு அதிர்ந்து,போக வேண்டாமென்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.அனால் இளவரசி கேட்காமல் சென்றுவிட்டாள்.இனி.....

1 comment:

Anonymous said...

adutha release epo manirathnam assistant sir? :-)
- snegithi